A/L பரீட்சை முடிவுகள்! கொடி கட்டிப் பறக்கும் யாழ்.இந்துக் கல்லூரி!!

ஓகஸ்ட் மாதம் நடந்து முடிந்த க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் கணிதம், உயிரியல், வர்த்தகம் பிரிவில் முதலிடம் பெற்று யாழ்.இந்துக் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

வெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில் ஒரு மாவட்டத்தில் கணிதம், உயிரியல், வர்த்தகம் போன்ற மூன்று பிரிவுகளிலும் மாவட்ட ரீதியில் முதலிடத்தை யாழ்.இந்துக் கல்லூரி மாணவர்கள் பெற்றுள்ளனர்.

இது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு பெருமையான ஒரு நாளாகும். இந்துவின் கொடி மீண்டும் துளிர்விட்டுப் பறக்க ஆரம்பித்துள்ளது எனலாம்.


Previous Post Next Post