நெடுந்தீவுக்குள் நுழைந்த மர்ம நபர்கள்! இந்திய ஊடகம் திடுக்கிடும் தகவல்!!

கடல் வழியாகப் படகு மூலம் யாழ்.தீவகம் நெடுந்தீவுக்குள் மர்ம நபர்கள் நுழைந்துள்ளதாகவும், அவர்களைத் தேடும் பணிகளில் பொலிஸ் மற்றும் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகம் ஒன்று திடுக்கடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் இந்தியாவிலிருந்து தப்பி வந்தவர்கள் என்றும் பேசாளை பகுதியைச் சேர்ந்த முஜிபூர்ரகுமான், அந்தோணிதாஸ் குரூஸ் மற்றும் இவர்களுடன் ஆண் ஒருவரும் பெண்ணும் உள்ளடங்குகின்றனர்.

இவர்கள் இரண்டு பேரும் உள்நாட்டுப் போரின் போது அங்கிருந்து தமிழகத்திற்குத் தப்பி வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியுள்ளனர். இந்த நிலையில் இலங்கைக்கு 2 பேரும் திரும்ப முயன்றனர்.

இவர்களுடன் சேலம் அகதிகள் முகாமைச் சேர்ந்த ஒரு ஆணும்இ பெண்ணும் இலங்கை செல்ல விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து 4 பேரும் ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு தப்பி செல்ல திட்டமிட்டனர்.

இதற்காக சம்பவத்தன்று நள்ளிரவில் ராமேசுவரம் கடலோர பகுதிக்கு வந்த அவர்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த பாம்பனை சேர்ந்த ஜஸ்டின் என்பவரின் படகை திருடி அதன் மூலம் இலங்கை நெடுந்தீவுக்கு 4 பேரும் சென்றதாக தெரிகிறது.

பின்னர் அங்கு படகை விட்டு விட்டு இலங்கைக்கு சென்றனர். அந்நாட்டு பொலிஸார் விசாரணை நடத்தியபோது 4 பேரிடமும் இலங்கை குடியுரிமை ஆவணங்கள் இருந்தன. இதையடுத்து 4 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

இதற்கிடையில் ஜஸ்டின் படகு திருட்டுபோய் இருப்பதை கண்டு அவர் மண்டபம் போலிஸூக்கும்இ கடலோர காவல்படைக்கும் தகவல் தெரிவித்தார்.

பொலிஸார் நடத்திய விசாரணையில் நெடுந்தீவு அருகே படகு கேட்பாரற்று நின்றது தெரியவந்தது. ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக 20 முதல் 40 மைல் கிலோ மீட்டர் தூரமே உள்ளது.

இதனை பயன்படுத்தி கடத்தல் சம்பவங்களும்இ அகதிகள் அங்கிருந்து வருவதும்இ இங்கிருந்து செல்வதும் சர்வ சாதாரணமாக நடந்து வருகின்றதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
Previous Post Next Post