கடற்படை வாகனம் மோதி விபத்து! கணவன் உயிரிழப்பு! மனைவி படுகாயம்!!! (படங்கள்)

கடற்படையினரின் வாகனம் மோதியதில் கணவன் உயிரிழந்துள்ளதுடன், மனைவி படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த முள்ளிவாய்க்கால் உப தபால் அதிபரான மனைவியே படுகாயமடைந்தார். அவரது கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,

வட்டுவாகல் சப்த கன்னியர் ஆலயத்தின் முன்பாக கணவன், மனைவி இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது கடற்படையினரின் வாகனம் ஒன்று மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மனைவி ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

விபத்தில் படுகாயமடைந்தவர் முள்ளிவாய்க்கால் உப தபால் அதிபரான ஜீவன் டினுசா (வயது-24) என்றும் அவருடைய கணவரான துணுக்காயைச் சேர்ந்த கே.ஜீவன் (வயது-32) உயிரிழந்ததாகவும் தெரிய வருகின்றது.

விபத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதியான கடற்படை சிப்பாய் முல்லைத்தீவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



Previous Post Next Post