தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்ட பெண் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார். தனது கணவனை அச்சுறுத்துவதற்காக தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டபோது தவறுதலாகத் தீப்பற்றிக் கொண்டதிலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் யாழ்.குருநகர்ப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் விதுஜா (வயது-21) என்ற இளம் குடும்பப் பெண்ணே உயிரிழந்தவர் ஆவார்.
தினமும் போதையில் வரும் கணவனைத் திருத்துவதற்காக கடந்த 8 ஆம் திகதி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தனக்குத் தானே தீ வைக்கப் போவதாகப் பாவனை செய்துள்ளார். இதன்போது தவறுதலாக அவரின் உடலில் தீப்பற்றிக் கொண்டதில் படுகாயமடைந்தார்.
அவரை உடனடியாக மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந் நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் யாழ்.குருநகர்ப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் விதுஜா (வயது-21) என்ற இளம் குடும்பப் பெண்ணே உயிரிழந்தவர் ஆவார்.
தினமும் போதையில் வரும் கணவனைத் திருத்துவதற்காக கடந்த 8 ஆம் திகதி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தனக்குத் தானே தீ வைக்கப் போவதாகப் பாவனை செய்துள்ளார். இதன்போது தவறுதலாக அவரின் உடலில் தீப்பற்றிக் கொண்டதில் படுகாயமடைந்தார்.
அவரை உடனடியாக மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந் நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.