இளம் பெண்ணுக்கு காலையில் பிரசவம்! மாலையில் திருமணம்!!

தனக்கு பிரசவம் நடந்த அதே நாளில் தனது திருமணம் செய்து கொண்ட விநோத சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தியா, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் கடவும் பாக்கம் எனும் இடத்தில் கோகிலா என்ற இளம் பெண்ணும் அதே பகுதியில் உள்ள பரமசிவம் என்பவரும் நெருங்கி பழகியுள்ளனர்.

கோகிலா அருகில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகின்றார். இருவரும் காதலித்து வந்த நிலையில் கோகிலா கர்ப்பமானார்.

திருமணம் ஆகாமலே குறித்த பெண் கர்ப்பமாகிய நிலையில் அங்கு பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் இது குறித்து பரமசிவம் வீட்டில் கோகிலாவை தங்கள் மருமகளாக ஏற்றுக் கொள்ள சம்மதிக்கவில்லை.

இந் நிலையில் கோகிலா கடந்த சனிக்கிழமை அன்று திண்டிவனத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அழகான ஆண் குழந்தை ஒன்றை பிரசவித்திருந்தார்.

இதனையடுத்து இரு தரப்பினரையும் அழைத்து அதிகாரிகள் சமரசப் பேச்சுக்களில் ஈடுபட்டு அவர்களின் சம்மதங்களைப் பெற்றனர்.

உடனடியாக பரமசிவனுக்கும் கோகிலாவுக்கும் குழந்தை பிறந்த அதேநாளில் திருமணமும் நடந்துள்ளது.

Previous Post Next Post