யாழில் விபத்தில் உயிரிழந்த சகோதரி! அதிர்ச்சியில் உயிரிழந்த மற்றுமொரு சகோதரி!!

யாழ்ப்பாணத்தில் கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த பெண் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 

குருநகர் பகுதியைச் சேர்ந்த ஜோன்சன் வலன்சன் ஜெகதீஸ்வரி (வயது-42) என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
குறித்த பெண் உயிரிழந்த செய்தியை அறிந்த அவரின் சகோதரி அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜோஜ் கெனடி றஞ்ஜினி (வயது-57) என்ற உடன்பிறந்த சகோதரியே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். தனது சகோதரி உயிரிழந்துள்ள செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்து மயங்கி விழுந்த மேற்படி பெண்ணை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதிக்கப்பட்ட போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
இந்த இரண்டு மரணங்களும் குருநகர்ப் பகுதியினை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Previous Post Next Post