உணவகத்திற்குள் வாள்வெட்டு! ஒருவர் உயிரிழப்பு!! இருவர் படுகாயம்!!! (படங்கள்)

இரவு நேர உணவகம் ஒன்றுக்குள் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இச் சம்பவம் நீர்கொழும்பு-பெரியமுள்ள பகுதியில் நேற்றிரவு 9.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த உணவகத்திற்கு வானில் வந்த கும்பல் தகராற்றில் ஈடுபட்டதுடன், உணவக ஊழியர் ஒருவரை வெட்டிக் கொலை செய்துள்ளது.

அத்துடன் இச் சம்பவத்தில் இருவர் வெட்டப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


Previous Post Next Post