இலங்கையில் வேகம் கொண்டது கொரோனா! இன்று மட்டும் 32 பேருக்குத் தொற்று!!

கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 8 பேர் இன்று  மாலை (ஏப்ரல் 20) திங்கட்கிழமை  அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் இன்று மட்டும் 32 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 303ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது.

நேற்று முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 17 பேர் கோரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதேவேளை  97 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர். 199 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Previous Post Next Post