எதிர்பார்த்த பரீட்சைப் பெறுபேறு கிடைக்கவில்லை! மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!!

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் தான் எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்காததால் மன விரக்தி அடைந்த மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் முல்லைத்தீவு - சிலாவத்தை பகுதியில் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது .

முல்லைத்தீவு - சிலாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்ற சந்திரன் கம்சிகா என்ற 17 வயதுடைய மாணவியே உயிரிழந்துள்ளார்.

நேற்றையதினம் வெளியாகிய சாதாரண தர பரீட்சை பெறுபேற்றில் சிறந்த பெறுபேற்றைப் பெற்று உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் கல்வி கற்க வேண்டும் என்ற ஆவலோடு காத்திருந்த குறித்த மாணவிக்கு உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் கல்வி கற்க கூடிய எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் இன்று காலை சேலை ஒன்றினால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் .

குறித்த தற்கொலை சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

Previous Post Next Post