மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு!

நாடுமுழுவதும் மே 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முழு நாள் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் நாளைமறுதினம் 16ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் 18ஆம் திகதி திங்கட்கிழமை தளர்த்தப்படும்.

அத்தோடு கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு நடைமுறை மறு அறிவித்தல்வரை தொடரும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு 23 மாவட்டங்களிலும் வரும் 18ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதிவரை தினமும் அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் இரவு 8 மணிக்கு மீளவும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த போதும் இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதார செயற்பாடுகளை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்காக கடந்த 11 திங்கள் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டம் எதிர்வரும் 16 சனிக்கிழமை வரை தொடர்ச்சியாக செயற்படுத்தப்பட்டு மே 18 திங்கள் முதல் மீண்டும் முன்னெடுக்கப்படும்.

முன்னர் வெளியிடப்பட்ட அறிவித்தல்களில் குறிப்பிடப்பட்ட அதனுடன் தொடர்புடைய நிபந்தனைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லை.

Previous Post Next Post