திங்கள் முதல் வழமைக்குத் திரும்புகிறது யாழ்ப்பாணம்! அரச அதிபர் விடுத்த வேண்டுகோள்!!

எதிர்வரும் திங்கட்கிழமையில் இருந்து யாழ்ப்பாணம் வழமைக்குத் திரும்பும் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

எதிவரும் திங்கட்கிழமையில் இருந்து யாழ்ப்பாண நகரை வழமையான செயற்பாட்டுக்கு உட்படுத்துவது தொடர்பான விசேட கூட்டம் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த இரண்டு மாதங்களின் பின்னர் எதிர்வரும் திங்கட்கிழமையில் இருந்து யாழ்.மாவட்டம் மீண்டும் வழமைக்குத் திரும்பவுள்ளது. அனைத்துச் செயற்பாடுகளும் வழமை போன்று இடம்பெறும்.

எனினும் பொதுப் போக்குவரத்து, வர்த்தகர்கள், சிகை அலங்கரிப்பாளர்கள், உணவக உரிமையாளர்கள் ஆகியோா் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணம் தமது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அரச அதிபர்,

யாழ்.மாவட்டமானது வழமைக்குத் திரும்புகின்றபோதிலும் கொரோனாத் தொற்று அபாயம் இன்னும் நீங்கிவிடவில்லை. எனவே மக்கள் இந்த விடயத்தில் அவதானமாகச் செயற்பட்டு அநாவசியமாக வீடுகளிலிருந்து வெளியே வராது  தேவைவையான விடயங்களுக்கு மட்டும் மக்கள் வெளியில் வந்து தமது தேவைகள் முடிந்தபின்னர் வீடுகளில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முன்வர வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Previous Post Next Post