பிரான்ஸில் யாழ்.இளைஞன் கொரோனாத் தொற்றிலிருந்து மீண்ட பின் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் மிருசுவில் விடத்தற்பளையைச் சேர்ந்த 37 வயதுடைய பத்மநாதன் சிவஜீவன் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள். கடந்த மாதம் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பூரண குணமடைந்த இளைஞர் மீண்டும் சிறுநீராக நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பயனின்றி 28-05-2020 இன்று உயிரிந்துள்ளார்.

புலம் பெயர் நாடுகளுக்கு பல துன்பங்கள், கனவுகள் பொறுப்புக்களை சுமந்து வரும் தமிழர்கள் நோய், விபத்து, விபரீத முடிவுகளினால் உயிரிழந்து வருகின்றமை மிகவும் வேதனையான விடயமாகவுள்ளது.
Previous Post Next Post