யாழில் 15 வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 25 வயது இளைஞன்!

15 வயதான சிறுமியை பாலயல் வல்லுறவிற்குள்ளாக்கிய 25 வயதுடைய இளைஞனை பருத்தித்துறை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையும், இளைஞனும் ஒன்றாக தொழிலுக்கு சென்று வருபவர்கள். வீட்டில் சிறுமியின் தந்தை இல்லாத தருணம் பார்த்து, சிறுமியை சீரழித்துள்ளார்.

சிறுமி பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய இளைஞன் நேற்றிரவு கைதானார்.
Previous Post Next Post