யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் கனடாவில் மர்மக் கொலை!

யாழ்ப்பாணம் குடும்பசிட்டியைச் சோ்ந்தவா் கனடாவின் மார்க்கம் நகரில் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை இந்த கொலை சம்பவம் நடந்தது. மதன் மகாலிங்கம் (வயது-45) என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.

கடந்த 6ஆம் திகதி ஸ்டீல்ஸ் வீதி, கிழக்கு மார்க்கம் பகுதியில், மேரிடேல் அவென்யூவில் உள்ள ஒரு வீட்டிற்கு வெளியே உயிரிழந்த நிலையில் இவரது சடலம் மீட்கப்பட்டது.

அவரை கொலை செய்தவர்கள் யார் என்பது தெரியவில்லை. தொழில் போட்டி காரணமாக கொலை இடம்பெற்றதா என்றும் பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

இவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அறிவித்த யோர்க் பிராந்திய காவல்துறையினர், அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டனர்.
Previous Post Next Post