யாழில் கொரோனா அச்சம்! 3 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் சுய தனிமைப்படுத்தலில்!


கோப்பாயில் ஒரு குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டது!

இரண்டாம் இணைப்பு-

கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வெலிக்கடை சிறையில் இருந்து வந்த நபர் ஒருவர் இங்குதங்கியுள்ளார். அந்த வீட்டிலிருந்த குடும்பம் உறுப்பினர்கள் 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

முதலாம் இணைப்பு-

யாழ்ப்பாணத்தில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் அவர்களது வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துக்குச் சென்று வந்த மூவரின் குடும்பங்களே இவ்வாறு சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இரண்டு குடும்பங்களும் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரு குடும்பமும் இவ்வாறு சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இன்றுவரை 252 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
Previous Post Next Post