யாழில் வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டுச் சென்ற பெண்ணுக்கு நடந்த துயரம்!

யாழ்.கொக்குவில் மேற்கு - கேணியடி பகுதியில் வேலைக்கு புறப்பட்ட பெண்ணின் மோட்டார் சைக்கிளில் இருந்த கைப்பை கொள்ளையர்களால் திருடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதனுள் இருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஒரு மோதிரம் ஆகியனவும் திருடப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

காப்புறுதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் குடும்ப பெண் பணிக்கு புறப்பட்டுள்ளார். இதன்போது மோட்டார் சைக்கிள் ஆவணங்களை எடுக்க மறந்து விட்டுச் சென்ற குறித்த பெண், மீண்டும் அதனை எடுப்பதற்காக வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்றுள்ளார்.

இந் நிலையில் மீண்டும் திரும்பி வந்த பார்த்தபோது, மோட்டார் சைக்கிளில் வைத்து விட்டுச் சென்ற கைப்பை திருடி செல்லப்பட்டிருக்கின்றது.  குறித்த பையில் ஒரு லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஒரு தங்க மோதிரம் ஆகியன இருந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள சீ.சி.ரி.வி கமரா பதிவுகளை ஆராய்ந்து விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
Previous Post Next Post