வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி புகையிரம் இன்று காலை புகையிரத கடவையிலிருந்து விலகி தடம் புரண்டதால் வட பகுதிக்கான புகையிரத போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இன்று அதிகாலை 5.50 மணியளவில் வவுனியா புகையிரத நிலையத்திலிருந்து கடுகதி புகையிரதம் கொழும்பை நோக்கி பயணத்தை மேற்கொண்ட போது 6.15 மணியளவில் புனாவை பகுதியில் வைத்து புகையிரதம் தடம் புரண்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் இரண்டு கிலோமீற்றர் தூரம் புகையிர பெட்டிகள் இழுத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இதன்போது புகையிரதத்தில் பயணித்த பயணிகள் உட்பட புகையிரதத்திற்கு எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை.
என்ற போதும் இதனால் வடபகுதிக்கான புகையிரத போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டுள்ளது. அத்துடன் தடம் புரண்ட பெட்டிகளை புனாவை புகையிரத கடவையில் விட்டு விட்டு ஏனைய பெட்டிகளுடன் ஒரு மணிநேரம் தாமதத்தின் பின்னர் கடுகதி புகையிரதம் மீண்டும் கொழும்பை நோக்கிய தனது பயணத்தை மேற்கொண்டுள்ளது.
இச்சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு சென்ற தொழிநுட்பவியலாளர்கள் தடம் புரண்ட புகையிரத பெட்டிகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புகையிரத திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை 5.50 மணியளவில் வவுனியா புகையிரத நிலையத்திலிருந்து கடுகதி புகையிரதம் கொழும்பை நோக்கி பயணத்தை மேற்கொண்ட போது 6.15 மணியளவில் புனாவை பகுதியில் வைத்து புகையிரதம் தடம் புரண்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் இரண்டு கிலோமீற்றர் தூரம் புகையிர பெட்டிகள் இழுத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இதன்போது புகையிரதத்தில் பயணித்த பயணிகள் உட்பட புகையிரதத்திற்கு எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை.
என்ற போதும் இதனால் வடபகுதிக்கான புகையிரத போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டுள்ளது. அத்துடன் தடம் புரண்ட பெட்டிகளை புனாவை புகையிரத கடவையில் விட்டு விட்டு ஏனைய பெட்டிகளுடன் ஒரு மணிநேரம் தாமதத்தின் பின்னர் கடுகதி புகையிரதம் மீண்டும் கொழும்பை நோக்கிய தனது பயணத்தை மேற்கொண்டுள்ளது.
இச்சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு சென்ற தொழிநுட்பவியலாளர்கள் தடம் புரண்ட புகையிரத பெட்டிகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புகையிரத திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.