யாழ்.இளவாலைப் பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் மீது தாக்குதல்!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இளவாலையில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் இனந்தெரியாத கும்பல் ஒன்றினால் தாக்குதலுக்குள்ளாகி உள்ளார். இன்று காலை 7.30 மணியளவில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போது இளவாலையில் வைத்து ஆசிரியர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அரியாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரே தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வர் ஆசிரியரை வீதியில் வழிமறித்து அவர் மீது தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் பாடசாலை அதிபர் ஊடாக இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை வழங்கியுள்ளார். சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post