மணிவண்ணனுக்கு கட்சித் தலைமையால் அனுப்பப்பட்ட கடிதம் வெளியானது!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் பொறுப்பிலிருந்தும், ஊடகப் பேச்சாளர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக வி.மணிவண்ணனிற்கு கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக தெரியவருகின்றது.

கட்சியின் செயலாளரிடமிருந்து உத்தியோகபூர்வமான அறிவித்தல் மின்னஞ்சல் வழியாக மணிவண்ணனிற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.   அது தொடர்பான கடிதம் தற்போது எமக்கு கிடைத்துள்ளது.

இதே வேளை இன்று இடம்பெற்ற தொலைகாட்சி நிகழ்வொன்றில் கலந்து கொண்ட கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மணிவண்ணனுக்கான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் தனது கையொப்பம் இடப்படாமல் அனுப்பப்பட்டதாகவும்,பதிவு தபால் மூலம் அனுப்பப்பட்ட கடிதத்தில் கையொப்பம் இடப்பட்டதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post