பிரான்ஸில் பரவிய வதந்தியால் பலர் காயம்! பொலிஸார் குவிப்பு!! (வீடியோ)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்சின் விருதுக்கு புகழ் பெற்ற நகரத்தில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக தகவல்கள் வெளியாகின.

2020 ஆகஸ்ட் 10, மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நடமாடுவதாக வதந்தி பரவியதையடுத்து மக்கள் பயந்து அங்குமிங்கும் ஓடத் தொடங்கியதால் பதற்றம் ஏற்பட்டது.

உலக சினிமா விருதுகள் வழங்குவதற்கு பெயர்போன நகரமான Cannesஇல் நள்ளிரவுக்குப்பின் துப்பாக்கிச்சூடு நடந்ததாக தகவல்கள் வெளியாகின.


அதைத் தொடர்ந்து மக்கள் பயத்தில் ஆங்காங்கு ஓடத்தொடங்கியுள்ளனர். இதனால், பலர் காயமடைந்ததாக அவசர உதவி சேவைகளின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், அப்படி ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவமே Cannes நகரில் நடக்கவில்லை என்றும், யாரும் துப்பாக்கியுடன் நடமாடவில்லை என்றும் கூறியுள்ள நகர மேயர் David Lisnard, யாரோ ஒருவர் துப்பாக்கிச்சூடு நடக்கிறது என சத்தமிட்டதாலேயே இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததாக தெரிவித்துள்ளார்.

என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் குறிப்பிட்ட பகுதியில் குவிக்கப்பட்டனர்.


வெளியாகியுள்ள காணொளி ஒன்றில், ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் பயத்தில் அலறியபடி ஓடும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

அப்படி ஓடும்போதுதான் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பல முறை, குண்டு வெடிப்புகள், துப்பாக்கிச்சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதைத் தொடர்ந்து மக்களிடம் இன்னமும் பயம் நிலவுவதாலேயே இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது எனலாம்.
Previous Post Next Post