பிரான்ஸில் தனிப்பட்ட நிகழ்வுகளால் பரவும் கொரோனா! ஜனாதிபதி எச்சரிக்கை!! (வீடியோ)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கொரோனாத் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பிரான்ஸ் அரசால் அவ்வப்போது அறிவிப்புக்களும் எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி மக்ரோன் மக்களுக்கு விடுக்கப்பட்ட செய்தியில்,


கொரோனா வைரஸிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மக்களே மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் முகக் கவசங்கள் அணிதல், சமூக இடைவெளிகளைப் பேணுதல், தொற்று நீக்கிகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றை மக்கள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது இவ்வாறிருக்க, தனிப்பட்ட வைபவங்கள் ஊடாகவே தற்போது கொரோனா வைரஸ் பரவுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இயன்றவரை தனிப்பட்ட நிகழ்வுகள், வைபவங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


இதேவேளை பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரங்களை பிரான்சின் பொதுச் சுகாதார பணிமனை வெளியிட்டுள்ளது,

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், செப்டம்பர் 08, 2020 செவ்வாய்க்கிழமை

பிரான்ஸ் மருத்துவமனைகளில் 39பேர் மரணம்

6,544 புதிய தொற்றுக்கள் உறுதி


இதுவரை....
மொத்த இறப்புக்கள் 30,764
மொத்த தொற்றுக்கள் 335,524

EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,475

மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 20,289 (24 மணி நேரத்தில் +39) ஆகும்.
Previous Post Next Post