கடற்கரையில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம்! (படங்கள்)



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கல்முனை 2 ஆம் பிரிவு கடற்கரை பிரதேசத்தில் கரையொதுங்கிய பெண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை 2 ஆம் பிரிவு கடற்கரை பிரதேசத்தில் இன்று காலை பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

உடனடியாக சடலத்தை அடையாளம்காண பொலிஸார் முயற்சி செய்த போதிலும் அது பலனளிக்கவில்லை. இதனால் பொதுமக்களின் உதவியை நாடி சடலம் தொடர்பாக அறிவித்து அடையாளம்காண உதவுமாறு கேட்டிருந்தனர்.

அதன் பின்னர் அதிகளவான மக்கள் வந்து பார்வையிட்டு சென்றிருந்த நிலையில், அவ்விடத்திற்கு வந்த இறந்த பெண்ணின் மகள் அடையாளம் காட்டியிருந்தார். இதனடிப்படையில் கல்முனை 02 அன்னை வேளாங்கன்னி வீதியை சேர்ந்து 2 பிள்ளைகளின் தாயான 75 வயது மதிக்கத்தக்க சின்னத்தம்பி நேசம்மா என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருதுடன் சடலம் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டு காணப்பட்டதாகவும் அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர்.

Previous Post Next Post