பிரான்ஸில் கொலை செய்யப்பட்டவர்களின் புகைப்படங்கள் வெளியாகியது! (படங்கள்)



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்ஸ், பாரிஸ் புறநகர்ப் பகுதியான Noisy-le-Sec, (Seine-Saint-Denis) நகரின் rue Emmanuel Arago வீதியில் உள்ள வீட்டில் (03/10/2020) சனிக்கிழமை காலை இடம்பெற்ற குடும்ப வன்முறை காரணமாக யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய்ப் பகுதியைச் சேர்ந்த ஐவர் பலியாகினர். 

நான்கு சிறுவர்கள் மற்றும் ஒரு பெண் என ஐவர் இறந்த நிலையிலும் (ஒரு கைக்குழந்தை, 4 வயது குழந்தை, இரு 13 வயது சிறுவர்கள், மற்றும் வயதான ஒரு பெண் - தாக்குதல் நடத்தியவரின் மனைவி) மேலும் ஐவர் படுகாயமடைந்த நிலையிலும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தாக்குதல் நடாத்திய நபர் தன் மனைவியையும் இரு பிள்ளைகளையும் சுத்தியலால் அடித்து கொன்றுவிட்டு தனது தங்கையையும் அவரது கணவரையும் அவசரமாக வைத்தியசாலை செல்லவேண்டும் வாருங்கள் என தொலைபேசியில் அழைக்க, தங்கை தனது நான்கு பிள்ளைகளுடன் கணவரையும் கூட்டிக்கொண்டு அங்கு சென்ற நிலையில் அவர்கள் மீதும் கொடூரமாக தாக்கி இரு குழந்தைகளை கொலை செய்தும் தங்கையையும் கணவரையும் தாக்க மற்ற இரு குழந்தைகளும் தப்பி வெளியே ஓடி உள்ளனர்.

இப்படி ஒரு பயங்கரமான குடும்ப வன்முறையை இதுவரை பிரான்சில் பார்க்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர். "சம்பவ இடம் மிகவும் பயங்கரமாக இருந்தது. எங்களில் பலர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். கத்தி ஒன்றும் பெரிய சுத்தியல் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது!" என காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நபர் தன்னை தானே தாக்கியதில் சம்பவ இடத்தில் நினைவை இழந்து 'கோமா' நிலையில் இருந்ததாகவும், அவரும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் கூறினர். சம்பவத்தை பார்க்கும் போது குறிப்பிட்ட ஒரு நபரால் நடத்தப்பட்டதாக நம்பமுடியவில்லை என்றும், விசாரணை நடைபெறுகிறது என்றும் தெரிவித்தனர்.

தாக்குதல் நடத்தியதாக படுகாயமடைந்த சிறுவனால் குற்றஞ்சாட்டப்பட்ட அவரின் மாமனார் கோமாவில் இருந்து மீண்டால் மட்டுமே உண்மையான தகவல் வெளிவரும் என கூறப்படுகிறது.

தொடர்புபட்ட செய்தி:-

கொலையாளியுடன் உயிரிழந்த மனைவி மற்றும் இரு பிள்ளைகள்.


கொலையாளியின் சகோதரியின் உயிரிழந்த இரு பிள்ளைகள்
Previous Post Next Post