பிரான்ஸில் கோரம்! மனைவி, 2 பிள்ளைகள், மற்றும் 2 மருமக்களை வெட்டிக் கொன்ற யாழ்.நபர்!! (வீடியோ)



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்ஸில் நேற்று இலங்கை குடும்பம் ஒன்று கத்தியால் வெட்டியும் அடித்தும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Noisy-le-Sec, (Seine-Saint-Denis) நகரின் rue Emmanuel Arago வீதியில் உள்ள குடும்பத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்ப தகராறு காரணமாகவே இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையயைச் சேர்ந்த நடுத்தர வயது மிக்க தந்தை ஒருவர் தனது மனைவி, 5 வயது மற்றும் 18 மாதங்களேயான பிள்ளைகளையும் படுகொலை செய்ததுடன் அவ்வீட்டில் இருந்த சகோதரியின் 5 வயது, 9 வயதுப் பிள்ளைகளையும் படுகொலை செய்துள்ளார்.

கொலை செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் மூவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் உள்ள இருவீட்டார்கள் ஒன்றாக இருந்த போது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சகோதரி, சகோதரியின் கணவர் மற்றும் கொலையாளியே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொலையாளி தன்னைத்தானே குத்திக் காயப்படுத்திக் கொண்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

“நேற்று முன்தினம்தான் குடும்ப சகிதம் கோவிலுக்கு சென்று வந்ததாகவும், தங்களின் குடும்பத்தில் எந்தவொரு பிரச்சினையும் இருந்ததில்லை” எனவும் குடும்ப உறுப்பினர் ஒருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

உயிரிழந்த குழந்தைகள் அந்த பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த குடும்பத்தினர் மிகவும் அமைதியானவர்கள் என அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post