
காங்கேசன்துறை வீதியில் வண்ணை சிவன் கோவிலுக்கு அருகில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் ஒருவர் இன்று காலை உழுந்து வடை ஒன்றினை வாங்கி வீடு சென்று வடையை சாப்பிட்டபோது வடைக்குள் கரப்பான் பூச்சி இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக குறித்த நபர் யாழ்.மாநகர சபையின் சுகாதார பரிசோதர்களுக்கு அறிவித்ததன் அடிப்படையில் யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார பரிசோதர்கள் உடனடியாக குறித்த கடைக்கு விஜயம் மேற்கொண்டு குறித்த கடையினை பரிசோதித்ததோடு கடைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.
