இலங்கையில் 15வது கொரோனா மரணம் பதிவாகியது!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கோவிட் -19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட குழியாபிட்டியவைச் சேர்ந்த 56 வயதுடைய ஆண் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்மூலம் நாட்டில் கோரோனா வைரஸ் தொற்றால் 15ஆவது நபர் உயிரிழந்துள்ளார்.

இதுவரை நாட்டில் 7 ஆயிரத்து 153 பேர் கோரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.


குழியாப்பிட்டிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் இருதய நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தவரே இன்று உயிரிழந்துள்ளார். அவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை பிசிஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது என்று சுகாதார அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.
Previous Post Next Post