பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!-(20.11.2020)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், நவம்பர் 20 , 2020 வெள்ளிக்கிழமை.
  • 381 + 757 = 1,138 பேர் மரணம்
  • 22,882 புதிய தொற்றுக்கள் உறுதி
மருத்துவமனைகளில் 381 பேர் உயிரிழந்துள்ளதுடன், கடந்த நான்கு நாட்களில் முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் 757 பேரும் உயிரிழந்துள்ளனர். 

இதனடிப்படையில் இன்றைய உயிரிழப்புக்கள் தொடர்பான சுகாதாரத் துறையின் அறிக்கையின் படி மொத்தம் 1,138 பேர் உயிரிழந்துள்ளதாகத் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுவரை….

மொத்த இறப்புக்கள் 48,265

மொத்த தொற்றுக்கள்  2,109,170

EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,530 (4 நாட்களில் +757)

மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 32,978 (கடந்த 24 மணி நேரத்தில் +381) ஆகும்.

முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் உயிரிழக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நான்கு அல்லது மூன்று நாட்கள் தாமதமாகவே சுகாதாரத் துறையினருக்கு வழங்கப்பட்டு, பிரான்ஸில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கையில் இணைத்துக் கொள்ளப்படுகின்றது.

இதன் காரணமாகவே நான்கு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு தடவை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post