யாழில் ஆவா குழு உறுப்பினர் திடீர் சாவு! அதனை அறிந்த அம்மம்மாவும் உயிரிழப்பு!!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இளம் குடும்பத் தலைவர் ஒருவர் உயிரிழந்த செய்தி கேட்டு அவரது பேத்தியான வயோதிப் பெண்ணும் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் உடுவில் ஆலடியில் இன்று காலை இடம்பெற்றது.
30 வயதுடைய சௌந்தர்ராஜன் சகிதரன், அவரது அம்மம்மா மாணிக்கம் நாகேஸ்வரன் (வயது-70) ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இளம் குடும்பத்தலைவரை அவரது மனைவின் இன்று அதிகாலை தூக்கத்திலிருந்து எழுப்பியுள்ளார். அவர் சுயநினைவற்ற நிலையில் இருப்பதை அறிந்து பேத்தியாரிடம் கூறியுள்ளார். அவர் திருநீறு பூசியுள்ளார்.

உடனடியாகவே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதும் அவர் அங்கு உயிரிழந்துள்ளார். அந்தச் செய்தியை அறிந்த அதிர்ச்சியின் பேத்தியாரும் மயங்கிச் சரிந்துள்ளார். அவரும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் இறப்பு விசாரணைகளை முன்னெடுத்தார். சடலங்கள் உடகூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த இளம் குடும்பத்தலைவர் ஆவா வன்முறைக் கும்பலைச் சேர்ந்தவர் என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

Previous Post Next Post