யாழ்.கல்வியங்காட்டைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் பிரான்ஸில் உயிரிழப்பு!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று (05.11.2020) பிரான்ஸில் உயிரிழந்துள்ளார். 

ச.சதீஸ்பாபு (வயது-39) என்ற இளம் குடும்பஸ்தரே திடீர் சுகவீனம் அடைந்து உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது உயிரிழப்புக்கு மாரடைப்பு காரணம் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கடந்த மாதம் 27 ஆம் திகதி மாரடைப்புக் காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் பிரான்ஸில் உயிரிழந்திருந்தார்.

இவர்  யாழ்.கல்வியங்காடு நொதேண் விளையாட்டுக் கழகத்தினுடைய சிரேஷ்ட முன்னணி விளையாட்டு வீரரும் சகலதுறை ஆட்ட நாயகனும் ஆவார்

இதேவேளை புலம்பெயர் நாடுகளில் இளவயதினர் அதிகளவில் மாரடைப்பு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 
Previous Post Next Post