எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இதன்மூலம் மருதனார்மடம் கொரோனா வைரஸ் கொத்தணியின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 77ஆக அதிகரித்துள்ளது.
இன்று அடையாளம் காணப்பட்டவர் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த சுன்னாகத்தில் வசிப்பவர் என்று அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 416 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவற்றில் ஒருவருக்கு மட்டுமே தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏனைய 417 பேருக்கு தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
அவர்களில் டிசெம்பர் 12ஆம் திகதி கண்டறியப்பட்ட மருதனார்மடம் கொரோனா வைரஸ் கொத்தணியினால் 8 நாள்களில் 77 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.
அத்துடன், புங்குடுதீவு பருத்தித்துறை, நெல்லியடி, காரைநகர், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் 23 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
100 தொற்றாளர்களில் 21 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.