சுன்னாகத்தில் ஒருவருக்குக் கொரோனா! யாழில் பாதித்தோர் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
மருதனார்மடம் பொதுச் சந்தை கொரோனா வைரஸ் கொத்தணியில் மேலும் ஒருவருக்கு கோவிட் – 19 நோய்த் தொற்று உள்ளமை இன்று (டிசெ. 18) வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதன்மூலம் மருதனார்மடம் கொரோனா வைரஸ் கொத்தணியின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 77ஆக அதிகரித்துள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்டவர் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த சுன்னாகத்தில் வசிப்பவர் என்று அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 416 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவற்றில் ஒருவருக்கு மட்டுமே தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஏனைய 417 பேருக்கு தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை நாட்டில் ஒக்டோபர் 4ஆம் திகதி ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலையின் பின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட் – 19 நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100ஆக உயர்வடைந்துள்ளது.

அவர்களில் டிசெம்பர் 12ஆம் திகதி கண்டறியப்பட்ட மருதனார்மடம் கொரோனா வைரஸ் கொத்தணியினால் 8 நாள்களில் 77 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.

அத்துடன், புங்குடுதீவு பருத்தித்துறை, நெல்லியடி, காரைநகர், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் 23 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

100 தொற்றாளர்களில் 21 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post