எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று (டிசெ. 23) புதன்கிழமை முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் அவருக்கு தொற்று உள்ளதாக அறிக்கை கிடைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இதன்மூலம் மருதனார்மடம் கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்ட 13ஆவது நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 95ஆக உயர்வடைந்துள்ளது.
மருதனார்மடம் சந்தை தொற்றாளருடன் நேரடித் தொடர்புடைய உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஒருவருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் ஏற்பட்ட முதலாவது கோவிட் -19 தொற்று நோய்க் கொத்தணி இதுவாகும்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று 120 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் ஒருவருக்கு மட்டுமே தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
ஏனையோருக்கு தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.