மீளவும் அதே இடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி; இன்று அடிக்கல் நடப்படும்! முடிவுக்கு வந்தது போராட்டம்!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மீண்டும் அதே இடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியைக் கட்டுவதற்குத் துணைவேந்தர் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதாக உறுதியளித்துள்ளதை அடுத்து உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தமது போராட்டத்தை நிறைவு செய்வதற்குச் சம்மதித்துள்ளார்கள் என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.


இன்று அதிகாலை 3 மணியளவில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்களைச் சந்தித்த மாணவர்களைச் சந்தித்த துணைவேந்தர் இந்த வாக்குறுதியை வழங்கியிருந்தார்.

அதன் படி இன்று காலை சுபவேளையில் முள்ளிவாய்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீளவும் அங்கீகழிக்கப்பட்ட நினைவுத் தூபி கட்டப்படுவதற்கான அடிக்கல் நடப்படவுள்ளது.

இந் நிலையில் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம் நிறைவுக்கு வந்தது.

துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா பழரசம் கொடுத்து மாணவர்களின் போராட்டத்தை முடித்து வைத்தார்.
Previous Post Next Post