சாராயம் என நினைத்து ரின்னரைக் குடித்த இளைஞன் சாவு! யாழ்.நாவற்குழியில் சம்பவம்!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
மதுபானம் என நினைத்து ரின்னரை குடித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நாவற்குழி 300 வீட்டுத் திட்டத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.

அதே இடத்தைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை ஜனாதீபன் (வயது-36 ) என்பவரே உயிரிழந்தார் என்று சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் வர்ணப்பூச்சு வேலை இடம்பெற்றுள்ளது. அதற்காக கால் போத்தல் சாராயப் போத்தலில் ரின்னர்விட்டு வைக்கப்பட்டுள்ளது.

போத்தலில் ரின்னர் இருப்பது தெரியாததால் சாராயம் என நினைத்து நேற்றுக் காலை 9 மணியளவில் இளைஞர் குடித்துள்ளார். அவர் குடித்துவிட்டு கிடக்கிறார் என வீட்டில் உள்ளவர்கள் விட்டுள்ளனர்.

எனினும் பிற்பகல் 2 மணியளவில் அவர் மயக்கமுற்று இருப்பதையறிந்த உறவினர்கள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவரை அனுமதித்துள்ளனர்.

எனினும் ஒருமணி நேர சிகிச்சையின் பின் சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இன்று விசாரணைகளை மேற்கொண்டார்.

உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Previous Post Next Post