யாழ்.சிறைச்சாலையில் மேலும் ஆறு பேருக்குக் கொரோனாத் தொற்று!

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
வடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 6 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று முன்னெடுக்கப்பட்ட 451 பேரின் பிசிஆர் பரிசோதனையில் 7 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னர் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 81 வயது வயோதிபப் பெண் ஒருவருக்கு அறிகுறிகள் இருந்தமையால் மாதிரிகள் பெறப்பட்டடன. அவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் யாழ்ப்பாணம் சிறைச்சாலை கைதிகள் 15 பேரிடம் இன்று மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 6 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் மேலும் 150 கைதிகளிடம் இன்று மாதிரிகள் பெறப்பட்டன. அவற்றின் பிசிஆர் முடிகள் நாளையே கிடைக்கும்” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
Previous Post Next Post