சாவகச்சேரியில் விபத்து! இளைஞன் உயிரிழப்பு!! (படங்கள்)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
ஹைஏஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.40 மணியளவில் சாவகச்சேரி ஐயா கடையடியில் இடம்பெற்றுள்ளது.

நெல்லியடி விக்னேஸ்வரா வீதியைச் சேர்ந்த அன்ரனி சியான் (வயது-20) என்ற இளைஞனே உயிரிழந்தார்.

மற்றொருவர் படுகாயமடைந்தார் என்று தெரிவித்த சாவகச்சேரி பொலிஸார், ஹைஏஸ் வான் சாரதியைக் கைது செய்துள்ளதாகக் கூறினர்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Previous Post Next Post