பிரான்ஸில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு! ஜனாதிபதி அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் மூன்றாவது அலையினை பிரான்ஸ் எதிர்கொண்டுள்ள நிலையில், நாடளாவியரீதியிலான கட்டுப்பாடுகளை அதிபர் ஏமானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார்.

அறிவிப்புக்களின் முக்கியமான பகுதி :

- வரும் சனிக்கிழமை முதல் மூன்று வார காலத்துக்கு நாடளாவியரீதியில் பாடசாலைகள் மூடப்படுகின்றன.

- இதுவரை அறிவிக்கப்பட்டிருந்த 19 பிராந்தியங்களையும் கடந்து நாடளாவியரீதியில் இரவு 7 மணியுடன் ஊரடங்கு சட்டம் நடைமுறைக்கு வருகின்றது.

- ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி வர்த்தக அங்காடிகள் மூடப்படுகின்றது.

- உரிய காரணங்கள் இன்றி மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து ஏப்ரல் 5 முதல் தடை செய்யப்படுகின்றது.

- பகல் வேளைகளில் 10 கிலோ மீற்றருக்கு அப்பாலான போக்குவரத்து உரிய அத்தாட்சி பத்திரங்களுடனேயே அனுமதிக்கப்படும்.

- வீடுகளில் இருந்து வேலை செய்வதற்கு ஊக்குவிக்கப்படுவதோடு, அதனை நடைமுறைப்படுத்துவற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

- முடக்கநிலையில் உள்ள வர்த்தகர்களுக்கான உதவிகள், Chomage Partiel கொடுப்பனவுகள் நீடிக்கப்படுகின்றது.

- மே மாத நடுப்பகுதியில் நாடு இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான படிமுறை படிமுறையிலான நிகழ்ச்சித்திட்டம் அறிவிக்கப்படும். உணவகங்கள், அருந்தகங்கள், சுற்றுலாதளங்கள், கலைக்கூடங்கள் போன்றன திறப்பதற்குரிய நிகழ்ச்சி திட்டமும் இவ்வேளையில் அறிவிக்கப்படும்.

- கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் விரைவுபடுத்தப்படும்.
  • 31 மார்ச்சில் இருந்து 70 வயதுக்கு மேலானவர்கள்
  • 16 ஏப்ரலில் இருந்து 60 வயதுக்கு மேலானவர்கள்
  • 15 மேயில் இருந்து 50 வயதுக்கு மேலானவர்கள்
  • யூன் நடுப்பகுதியில் இருந்து 50 வயதுக்கு கீழானவர்கள் என அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் திட்டம் நிரல்படுத்தப்பட்டுள்ளது.
- தற்போது 7000 அளவில் உள்ள தீவிரசிகிச்சைப் பிரிவு கட்டில்களின் போதாமையினை கருத்தில் கொண்டு, இதனை 10 ஆயிரமாக உயர்த்தப்படும்.
Previous Post Next Post