யாழில் 62 பேருக்குக் கொரோனாத் தொற்று! பெண் உயிரிழப்பு!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 62 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று வியாழக்கிழமை (மே 20) கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் ஆயிரத்து 272 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

அவர்களில் 77 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 62 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 6 பேரும் வவுனியா மாவட்டத்தில் 6 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 பேரும் மன்னார் மாவட்டத்தில் ஒருவரும் என 77 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வவுனியா பொது வைத்தியவாலையில் சேர்க்கப்பட்ட மூவருக்கும் செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மூவருக்கும் கொரோனா தொற்றுள்ளதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மூவருக்கும் கண்டாவளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மூவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 6 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 71 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மூவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

பருத்தித்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மூவருக்கும் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் மானிப்பாய் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் கோவிட் -19 தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தொற்றாளர்களுடன் முதல்நிலை தொடர்பைப் பேணியதாக சுயதனிமைப்படுத்தலில் கண்காணிக்கப்பட்ட 31 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நால்வருக்கும் யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும், உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 5 பேருக்கும் சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 4 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
Previous Post Next Post