யாழில் விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல்! நால்வர் காயம்!!


யாழ்.அரியாலை பகுதியில் மணல் கடத்தல் கும்பலை தடுக்க சென்ற விசேட அதிரடிப்படையினர் மீது மணல் கடத்தல் கும்பல் நடத்திய தாக்குதலில் 4 அதிரடிப்படையினர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

அரியாலைப் பகுதியில் சட்டவிரோத மண் அகழப்படுவதாக தகவலறிந்த நிலையில், சம்பவ இடத்திற்கு விசேட அதிரடிப்படையினர் சென்றுள்ளனர்.

இதன்போது கள்ள மண் கடத்தல்காரர்களுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.

இதில் 4 பேர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் இந்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Previous Post Next Post