யாழில் நகைக் கடை ஊழியர்களுக்குக் கொரோனா! தனிமைப்படுத்தப்பட்டது இரு கடைகள்!!


யாழ்ப்பாணம் மாநகரில் இரண்டு நகைக் கடைகள் சுகாதாரத் துறையினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதியில் உள்ள இரண்டு நகைக் கடைகளே இன்று முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இரண்டு நகைக் கடைகளிலும் பணியாற்றுபவர்களுக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் தனிமைப்படுத்தப்பட்டன.
Previous Post Next Post