12 ஊழியர்களுக்குக் கொரோனாத் தொற்று! யாழில் பிரபல தனியார் வங்கி முடக்கப்பட்டது!!


யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வீதியில் அமைந்துள்ள கொமர்ஷல் வங்கியின் பிரதான கிளையில் பணியாற்றும் 12 பேருக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் அந்தக் கிளை தற்காலிகமாக மூடப்பட்டது.

அத்துடன், அந்தக் கிளையில் பணியாற்றும் 40 உத்தியோகத்தர்கள், சுத்திகரிப்பு தொழிலாளிகள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொமர்ஷல் வங்கியின் யாழ்ப்பாணம் பிரதான கிளையில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள், சுத்திகரிப்புத் தொழிலாளிகள் என 34 பேரிடம் நேற்று மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.

அவர்களில் சுத்திகரிப்பு தொழிலாளி ஒருவர் உள்பட 12 பேருக்குகொவிட்-19 நோய்த்தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அங்கு பணியாற்றும் 40 உத்தியோகத்தர்களை சுயதனிமைப்படுத்தி கொமர்ஷல் வங்கியின் யாழ்ப்பாணம் பிரதான கிளையை தற்காலிக மூட மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் அங்கு நிரந்தரக் கடமையாற்றுபவர்கள் தவிர்ந்த வேறு கிளைகளில் பணியாற்றும் உத்தியோகத்தர்களைக் கடமைக்கு அமர்த்தி உரிய சுகாதார நடைமுறைகளின் கீழ் கிளையின் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கலாம் என பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பா.சஞ்சீவன் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
Previous Post Next Post