யாழ்ப்பாணத்தில் மேலும் 5 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழப்பு!


யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 5 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார் என்று போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குருநகரைச் சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவரும் நாவற்குழியைச் சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரும் உரும்பிராயைச் சேர்ந்த பெண் ஒருவருமாக மூவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.

அத்துடன், அச்சுவேலி பத்தமேனியைச் சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

மேலும் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 61 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 153ஆக உயர்வடைந்துள்ளது.
Previous Post Next Post