தைப்பூச திருநாளில் உலகப் பெருமஞ்சத்தில் பவனி வந்தார் இணுவில் கந்தன் (படங்கள்)

வரலாற்றுச் சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி ஆலய உலகப் பெரு மஞ்சம் தைப்பூச திருநாளான இன்று இரவு பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

நாதஸ்வர தவில் கலைஞர்கள் மங்கள வாத்தியம் இசைக்க, தமிழ் பாரம்பரியங்களை கலைஞர்கள் வெளிப்படுத்த மஞ்சம் பவனி வந்தது.

வள்ளி-தெய்வானை சமேதரராய் முருகப் பெருமான் மஞ்சத்தில் எழுந்தருள இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து வடம் பிடித்து இழுத்தனர்.
Previous Post Next Post