எரிபொருளுக்கு காத்திருக்கும் மக்களுக்கு அதிர்ச்சி!

அடுத்து வரும் எரிபொருள் கப்பலுக்கு செலுத்த தேவையான டொலர் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இல்லை என கூறப்படுகிறது. 
எரிபொருளுக்கு செலுத்துவதற்காக டொலர்களை கொள்வனவு செய்ய தேவையான பணம் போதுமான அளவில் கூட்டுத்தாபனத்திடம் இல்லை என்பதே இதற்கு காரணம்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை போன்ற அரச நிறுவனங்களுக்கு கடனுக்கு எரிபொருளை வழங்கியதன் காரணமாக கூட்டுத்தாபனத்திற்கு ரூபா மூலமான வருமானம் இல்லாமல் போயுள்ளது. இதன் காரணமாக டொலர்களை கொள்வனவு செய்ய பெற்றோலியக் கூட்டுத்தாபனம் திறைசேரியிடம் 214 பில்லியன் ரூபாவை கோரியுள்ளது.

எனினும் திறைசேரியிடம் பணம் இல்லாத காரணத்தினால், பணத்தை அச்சிட நேரிட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கூறியுள்ளார்.
Previous Post Next Post