யாழில் துண்டிக்கப்படவுள்ள மின் இணைப்புகள்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

யாழ். வடமராட்சி - தென்மராட்சி பகுதிகளில் 5 ஆயிரம் ரூபாவுக்கு மேல் மின் கட்டணம் நிலுவையில் வைத்திருப்போரின் மின் இணைப்பு எதிர்வரும் திங்கள் முதல் துண் டிக்கப்படும் என வடமராட்சி - தென்மராட்சி பிரதேசங்களுக்கான மின் பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 5ஆம் திகதி தொடக்கம் 5 ஆயிரம் ரூபாவுக்கு அதிகமான மின் கட்டண நிலுவை வைத்திருப்போர் அவற்றை செலுத்தி விடுமாறு அறிவிக்கப்பட் டுள்ளது.

மேலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் அதனை மீள இணைப்பதற்கு குற்றப் பணம் 3 ஆயிரம் ரூபா மின் கட்டணத்துக்கு மேலதிகமாக செலுத்தவேண்டும் எனவும் அறிவித்துள்ளது.
Previous Post Next Post