யாழில் உச்சம் தொடும் பாலியல் பலாத்கார சம்பவங்கள்!

யாழ்.மாவட்டத்திலும் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய தரவுகளில் இருந்து தொிய வருகின்றது.

யாழ்.மாவட்டத்தில் 2021ம் ஆண்டு 16 வயதிற்குட்பட்ட சிறுமிகள் மீது பாலியல் வன்புணர்வு இடம்பெற்றதாக 38 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றுள் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் 10 சம்பவங்கள் பதிவாகியுள்ளது.

அதிகளவான சம்பவங்கள் அச்சுவேலி பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளன. யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்தியத்தில் 28 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றுள் அதிகளவான சம்பவங்கள் கொடிகாமம் பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளன.

2022ம் ஆண்டில் 16 வயதிற்குட்பட்ட சிறுமிகள் மீது பாலியல் வன்புணர்வு இடம்பெற்றதாக கடந்த 9ம் மாதம் 30ம் திகதிவரை 24 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதில் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் 9 சம்பவங்களும், யாழ்ப்பாண பொலிஸ் பிராந்தியத்தில் 15 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. 

காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுகளிலும், யாழ்ப்பாண பொலிஸ் பிராந்தியத்தில் சுன்னாகம் பொலிஸ் பிரிவிலும் அதிகளவான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதேபோல் 2021ம் ஆண்டு 16 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மீதான வன்புணர்வு சம்பவங்கள் 5 பதிவாகியுள்ளன.

2022ம் ஆண்டு அந்த எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் 1 சம்பவமும், யாழ்ப்பாண பொலிஸ் பிராந்தியத்தில் 4 சம்பவங்களும் 2021ம் ஆண்டு பதிவாகியுள்ளன.

அதுவே இந்த ஆண்டு யாழ்ப்பாண பொலிஸ் பிராந்தியத்தில் 3 சம்பவங்களும், காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் 4 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

2021ம் ஆண்டில் பாரதுாரமான வன்புணர்வு சம்பவங்கள் 2 பதிவான நிலையில் இந்த ஆண்டு அது 3 ஆக அதிகரித்துள்ளது. நாடளாவியரீதியில் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸ் திணைக்களம் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post