கனடாவில் கார் விபத்து! கிளிநொச்சியைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு!!

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு ஈழத் தமிழர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஒன்ராரியோவில் புளுமவூன்டன் Grescent Road 19 Near Craigmore Crescent பகுதியில் நேற்றுமுன்தினம் (03) இரவு 11 மணியளவில் கார் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

ஒஷாவா, விட்சர்ச்-ஸ்டாஃப்வில்லியைச் சேர்ந்தவர்களே உயிரிழந்தனர். இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இன்னொருவர் படுகாயமடைந்த நிலையில் டொரோண்டோ மருத்துவமனைக்கு மருத்துவ உலங்கு வானூர்தியில் எடுத்துச் செல்லப்பட்டார்.

உயிரிழந்தவர்களில் ஒருவரான தனபாலசிங்கம் கஜன் (வயது-29) கடந்த சனிக்கிழமை திருமணம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சிப் பளைப் பகுதியைச் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post