எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
ஒன்ராரியோவில் புளுமவூன்டன் Grescent Road 19 Near Craigmore Crescent பகுதியில் நேற்றுமுன்தினம் (03) இரவு 11 மணியளவில் கார் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
ஒஷாவா, விட்சர்ச்-ஸ்டாஃப்வில்லியைச் சேர்ந்தவர்களே உயிரிழந்தனர். இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இன்னொருவர் படுகாயமடைந்த நிலையில் டொரோண்டோ மருத்துவமனைக்கு மருத்துவ உலங்கு வானூர்தியில் எடுத்துச் செல்லப்பட்டார்.
உயிரிழந்தவர்களில் ஒருவரான தனபாலசிங்கம் கஜன் (வயது-29) கடந்த சனிக்கிழமை திருமணம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சிப் பளைப் பகுதியைச் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.