எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இந்நிலையில் குறித்த வான் பாயும் காட்சியை காண்பதற்காக பல மக்கள் சென்று வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
நேற்று முன்தினம் வான் பாயும் பகுதியை பார்வையிடுவதற்காக சென்ற வாகனமொன்று குளத்துக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் அநியாயமாக உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த பகுதியில் குளித்தல் மீன்பிடித்தல் நடவடிக்கைகள் நீர்ப்பாசன திணைக்களத்தினால் தடை செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் தற்போது நாட்டில் நிலவுகின்ற கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காலப்பகுதிக்குள் இவ்வாறு வான் பாய்கின்ற காட்சிகளை பார்வையிடுவதற்காக வருகை தந்து ஏற்படுகின்ற அநியாய உயிரிழப்புகள் மற்றும் நோய் தாக்கங்களைக் கருத்தில் கொண்டு குறித்த பகுதிகளுக்கு மக்கள் அனாவசியமாக வருகை தருகின்ற நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த பகுதி வான் பாய்கின்றன நேரத்தில் மிக அழகாக காட்சி அளிக்கின்ற போதும் குளத்தின் பகுதிகள் மற்றும் துருசு பகுதிகளில் வருகை தந்து நீராடுகின்ற மற்றும் புகைப்படங்கள் எடுக்கும் செயல்பாடுகளில் அநியாய உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இவ்வாறான நடவடிக்கைகளை முற்றுமுழுதாக தடுத்து நிறுத்திக் கொள்ளுமாறு மக்களுக்கு சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.