ஏஎல், ஓஎல் மாணவர்களுக்காக தனியார் கல்வி நிறுவனங்களை திற்கும் திகதி அறிவிப்பு!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக இடைநிறுத்தப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களை க.பொ.த. சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக வரும் 25ஆம் திகதி தொடக்கம் மீள ஆரம்பித்து நடத்துவது தொடர்பான சுற்றறிக்கை 15 ஆம் தேதி வெளியிடப்பட்டதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், சிறப்பு மருத்துவர் அசேல குணவர்தன அறிவித்தார்.

இது குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த மாதம் 15ஆம் திகதி தனியார் கல்வி நிறுவனங்களை நடத்துவதற்கான சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சுற்றறிக்கையில் தெரிவிக்கட்டுள்ளதாவது;

ஜனவரி 25ஆம் திகதி முதல் மேல் மாகாணத்திற்கு வெளியே கல்வி நிறுவனங்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒரு வகுப்பில் இருக்கை திறனில் 50 சதவீதம் வரை மற்றும் அதிகபட்சம் 100 மாணவர்களுக்கு மட்டுமே இடமளிக்க முடியும்.

இந்த கல்வி நிறுவனங்கள் க.பொ.த சாதாரண தரம் மற்றும் க.பொ.த உயர்தரம் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே திறக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

பின்னர் நாட்டின் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப பிற ஏனைய தரங்களில் பயிலும் மாணவர்களுக்கும் வகுப்புகளையும் ஆரம்பிக்க முடியும்.

பயிற்சி வகுப்புகளை எவ்வாறு நடத்துவது மற்றும் கடினமான நேரத்தில் வகுப்பறைகளை எவ்வாறு சுத்தம் செய்வது என்பது குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் பிரேத்தியேக கல்வி வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்கள் இந்த சுகாதார வழிமுறைகளை சுற்றறிக்கையில் இருப்பதால் அவற்றைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேல் மாகாணத்தில் தனியார் கல்வி நிறுவனங்களை நடத்துவது மேலும் தாமதமாகும். மேல் மாகாணத்தில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பின்னர் தனியார் வகுப்புகள் தொடங்க அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பயணத் தடை மற்றும் தனிமைப்படுத்தல் நடைமுறைப்படுத்தும் பகுதிகளில் தனியார் கல்வி நிலையங்களை நடத்த முடியாது – என்றுள்ளது.
Previous Post Next Post