சடலம் குறித்த பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களால் இன்று அவதானிக்கப்பட்ட நிலையில் நெடுந்தீவு காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், மேலதிக விசாரணை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை மணல்காடு பகுதிகளில் நேற்றும் இரு உடல்கள் கரை ஒதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அடுத்தடுத்து சடலங்கள் கரையொதுங்கி வரும் நிலையில், இதற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் இதுவரை கண்டறியப்படவில்லை.