எரிபொருள் விலையை அதிகரித்தது ஐஓசி!


இந்திய ஒயில் நிறுவனம் (ஐஓசி) இன்று (6) நள்ளிரவு முதல் எரிபொருள்களின் விலையை அதிகரித்துள்ளது.

இதன்படி 92 ஒக்டைன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 184 ரூபாயாகும்.

டீசல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐஓசி டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 124 ரூபாயாகும்.
Previous Post Next Post